Nagaratharonline.com
 
முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா: நகரத்தார் பால்குடம்  Jul 23, 14
 
காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி முதல் செவ்வாய்க்கிழமையன்று நகரத்தார் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு செலுத்தினர்.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நகரத்தார்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. காலையில் அருள்மிகு முத்தாலம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு நகர சிவன் கோயில் வழியாக அம்மன் சன்னதி, செக்காலைச்சாலை, முத்துப்பட்டிணம் வழியாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால்குடம் செலுத்தினர்.