Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் குப்பை கிடங்கு அருகே கிடந்த மனித மண்டை ஓடு  Jul 14, 14
 
பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி குப்பைகள் கொட்டும் இடத்தின் அருகே மனித மண்டை ஓடு கிடந்தது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி காந்திசிலை பின்புறம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இக்குப்பையில் ஞாயிற்றுக்கிழமை மண்டை ஓடு ஒன்று கிடந்ததுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இக்குப்பைகளை உடனே அகற்றி தொற்றுநோய் ஏற்படா வண்ணம் மக்களை காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.