Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் கலெக்டர் ஆய்வு  Jul 12, 14
 
நெற்குப்பையில் அரசின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் விடுபட்டவர்கள் சேர்க்கைக்கான முகாமை கலெக்டர் ராஜாராமன் ஆய்வு நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.திருப்புத்தூர் தாலுகாவில், அரசின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தில், விடுபட்டவர்களுக்கான போட்டோ எடுக்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.நெற்குப்பை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் , நடந்த முகாமில் கலெக்டர் ராஜாராமன் ஆய்வு செய்தார்.தாசில்தார் ஜெயராமன், ஆர்.ஐ.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர் மக்களிடம், முகாம் குறித்து தகவல் கேட்டார்.கணக்கெடுப்பு நடத்தும் நிறுவனத்தினரிடம்,"விடுபட்டவர்களுக்கான பட்டியலை, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.க்களிடம் ஒப்படைக்கவும், ரேஷன் கடை அருகாமையில் முகாம் நடத்தவும், பொதுமக்களுக்கு தகுந்த முன்னறிவிப்பு செய்யவும்' வலியுறுத்தினார்.