Nagaratharonline.com
 
நிழற்கூரை இல்லாத கல்லல் ரயில்வே ஸ்டேஷன்  Mar 31, 14
 
கல்லல் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.
பகலில் கல்லல் ரயில்வே ஸ்டேஷனில் திருச்சி-மானாமதுரை,திருச்சி-ராமேஸ்வரம் ,மானாமதுரை-மன்னார்குடி ரயில்கள் நின்று செல்கின்றன.காரைக்குடி,சிவகங்கையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் இங்கிருந்து அதிகளவில் செல்கின்றனர். இரண்டு ரயில்கள் செல்லும் நிலையில் எதிரே உள்ள பிளாட்பார்மில் நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
நிழற்குடை அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கும் நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெயிலிலும்,மழையிலும் நிற்கும் பயணிகளை கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.