Nagaratharonline.com
 
சொக்கலிங்கம் புதூரில், கதவை எரித்து திருடிய திருடர்கள்  Mar 31, 14
 
சொக்கலிங்கம் புதூரை சேர்ந்தவர் ரவி வீரப்பன்,50. இவர், தற்போது பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். அவ்வப்போது, சொக்கலிங்கம் புதூரில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 17-ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, பெங்களூருக்கு சென்றுள்ளார். இவரது வீட்டின் பின்புற மரக்கதவை உடைத்து, உள்ளே உள்ள கதவை உடைக்க முடியாததால், எரித்து அதன் மூலம் உள்ளே புகுந்த திருடர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த ஐந்து கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரூபாய், இரண்டு பட்டு சேலை,பொருட்களை திருடி சென்றுள்ளனர். ரவி வீரப்பன் புகாரின் பேரில், செட்டிநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.