Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் தியாகராஜர் ஆராதனை விழா  Mar 31, 14
 
பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகளின் 21-ம் ஆண்டு ஆராதனை விழா, தமிழிசை விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

விழாவின் தொடக்கநாளான சனிக்கிழமை பொன்புதுப்பட்டி உடைய பிராட்டி கோயிலில் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தியாகராஜ சுவாமிகள் பட ஊர்வலத்தை பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா, ஆர்எம். சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற இசைவிழாவை உடுப்பி என். ரெங்கய்யர் தொடங்கி வைத்தார்.