Nagaratharonline.com
 
ஏப்.2, 3 -ல் பொன்னமராவதி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்  Mar 26, 14
 
திருச்சி முத்தரசன்நல்லூரில் உள்ள இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில் மின் வாரியம் மற்றும் குடிநீர்த்திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், வரும் 02.04.2014, 03.04.2014(புதன் மற்றும் வியாழக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களுக்கு இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தை சோóந்த 5 குடியிருப்புகளுக்கும் மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.