Nagaratharonline.com
 
NEWS REPORT: ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு - INK - Sangam News  Feb 9, 14
 
 
Ikkiya Arabu Naadugal Nagarathar Kootamaipu (INK) new committee information.

செட்டிக் கப்பலுக்கு செந்தூரான் துணை” என்பது நமது சமூகத்தின் வாழ்வியல் கோட்பாடு.

அந்த கோட்பாட்டின்படி, செட்டி முருகனின் துணையுடன், “ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு” (INK) என்கின்ற இந்தக் கப்பல் கடந்த 22 வருடங்களாக பட்டொளி வீசி பயணித்து கொண்டுயிருக்கிறது.

அப்படிபட்ட பாரம்பரிய பெருமை மிக்க இந்த கப்பலை வரும் காலத்தில் பெரும் பொறுப்பு எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நமது ஒற்றுமையை வலுப்படுத்தி, நம் இன கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வலியுறுத்தி , குழந்தைகளை முன்னிறுத்தி, நிறைகளை பெருக்கி, குறைகளைக் களைந்து, INK நாள் தோறும் வளர வேண்டும் என்பது எங்களது கனவு மற்றும் குறிக்கோள்.

பெரியோர்களின் வழிகாட்டுதலுடனும், இதுவரை INK – ஜ நடத்தி வந்த சொந்தங்களின் அனுபவத் துணையுடனும், வருங்காலத் தூண்களாகிய குழந்தைகளின் மகிழ்வோடும், உங்களின் எல்லோருடைய மேலான ஒத்துழைப்புடனும், இந்தக் கனவை மெய்ப்படுத்தி குறிக்கோளை அடைய விழைகின்றோம் .

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்.

என்ற குமரகுருபரரின் நீதிநெறி அறிவுரைகளை மனதில் நிலைநிறுத்தி, எங்களது பயணத்தைத் தொடங்குகிறோம்

Names From left

First row: Alamelu Senthilkumar. K, Vetriyur, Visalakshi Sathappan. N, Rayavaram,Vijaya Chockkalingam. SP, Kandavarayanpatti

Second row: Joint Secretary, M. Manikandan, Chockanathapuram, Secretary , R. Muthu Manickam, Kulipirai, President,S. Kasi Visvanathan, Venthanpatti, Treasurer, AT. Balamurugan, Venthanpatti, Joint Secretary , Srinivasan, Alavakottai

Third row: Al. Ramasamy, Rayavaram, Subbu Narayanan, Kandavarayanpatti, Radhakrishnan. A, Kadiyappati , Palaniappan.RM, Sevvur, Manikandan.An, Aranmanai Siruvaya, Peria Lakshmanan.SL, Paganeri & Joint Treasurer CT. Sreenivasan', Karaikudi.

===============================================

ஐக்கிய அரபு நாடுகளில் 2014 வருடத்து புத்தாண்டு கொண்டாட்டம்

ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு 151வது கலந்துரையாடல் கூட்டம் ஷார்ஜா – செட்டிநாடு பண்ணை இல்லத்தில், 03-01-2014 அன்று, செயலாளர் திரு. முத்து மாணிக்கம் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கி, ஆச்சிமார்களின் பூக்கட்டுதல் போட்டி, 2014 புத்தாண்டு வரவேற்பு கவிதைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், எழுத்துப் பட்டறைக் குழுவினர்வழங்கிய “பேரன்உண்டா” நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்வாக, கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும், கூட்டமைப்பை 22 வருடங்களுக்கு முன்பு நிறுவியவர்களில் ஒருவருமாகிய, சொக்கநாதபுரம் திரு. சேது வள்ளியப்பன் அவர்கள் அமீரகத்தில்,சொந்தத் தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் வரிசையில் முதலாவதாக கௌரவிக்கப்பட்டார்கள் . தலைவர் திரு. காசிவிசுவநாதன் சிறப்பு உரை மற்றும் விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

===============================================

ஐக்கிய அரபு நாடுகளில் 2013 வருடத்து பிள்ளையார் நோன்பு

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு (INK) சார்பாக 2013 ஆண்டு பிள்ளையார் நோன்பு விழா சங்கத்தின் மூத்த உறுப்பினர் அரியக்குடி திரு. நா.நா.லெட்சுமணன் செட்டியார் (ஷார்ஜா) அவர்கள் இல்லத்தில் 08-12-2013 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 3.00 மணியளவில் விநாயப் பெருமானுக்கு அபிசேக ஆராதனைகளுடன் வழிபாடு தொடங்கியது. மாலை 7.00 மணியளவில் சுமார் 300 பேர் இழை எடுத்துக் கொண்டார்கள். இரவு மங்கலப் பொருட்கள் ஏலம் மற்றும் விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றுது.

===============================================