Nagaratharonline.com
 
சென்னையில் பிப்ரவரி 27 முதல் தொடர்ச்சியாக 2 மணி நேரம் மின்வெட்டு  Feb 21, 12
 
சென்னையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) முதல் தொடர்ச்சியாக 2 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும்.

சென்னையை 5 பகுதிகளாகப் பிரித்து காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதி, காலை 10 - 12 மற்றொரு பகுதி, பின்னர் பகல் 12 - 2, மதியம் 2 - 4, மாலை 4 - 6 என காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியாக 2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதன் மூலம் பிற மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் மின்வெட்டு நேரம் 4 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்றார்.

source : Dinamani