Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் 21 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை  Feb 21, 12
 
வேகுப்பட்டியில் 21 அடி உயர காரிய சித்தி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேகுப்பட்டி கல்யாண வெங்கடேசுவர சுவாமி அறக்கட்டளை நிறுவனர் சா.அண. முத்துபழனியப்பன் குடும்பத்தினரால் இந்தக் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன

.
இந்த ஆஞ்சநேயர் சிலையை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த மங்களூரைச் சேர்ந்த ஸ்தபதி கே. தட்சிணாமூர்த்தி செதுக்கியுள்ளார். இந்தச் சிலை 27 டன் எடை கொண்ட ஒரே கல்லைச் செதுக்கி, 14 டன் கொண்ட விக்கிரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 17 அடி உயரமும், 5 அடி பீடமும் சேர்த்து 21 அடியில் இந்தச் சிலை உள்ளது. சிலையை பிரதிஷ்டை செய்த அன்றே 50-க்கும் மேற்பட்ட கிருஷ்ணப் பருந்துகள் இங்கு வட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.