Nagaratharonline.com
 
ஆக்கிரமிப்பில் தவிக்கும் கல்லுக்கட்டி கிழக்கு வீதி  Feb 19, 12
 
காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் அருகேயுள்ள கல்லுக்கட்டி கிழக்கு வீதியில் ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொப்புடையம்மன் கோயிலை சுற்றி கல்லுக்கட்டி கிழக்கு,மேற்கு, வடக்கு என நான்கு வீதிகள் உள்ளன. இந்த வீதிகளில் பாத்திரக்கடைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உட்பட ஏராளம் உள்ளன. காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வாகனங்கள் கல்லுக்கட்டி கிழக்கு வீதியை கடந்து செல்ல வேண்டும்.
காலை, மாலை நேரங்களில் சரக்கு லாரிகள் நடுரோட்டில் நின்று பொருட்களை இறக்கி, ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நெரிசலில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபடுகிறது. கொப்புடையம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

source : Dinamalar