Nagaratharonline.com
 
பயன்பாட்டிற்கு வராத மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட்  Feb 8, 12
 
சிவகங்கை - திருப்புத்தூர் மெயின்ரோட்டில், மதுரை - கல்லல், காரைக்குடி இடையே இயக்கப்படும் பஸ்கள் அதிகளவில் வந்து செல்லும் இடம் மதகுபட்டி.
கிராமப்புற பயணிகள் அதிகம் இங்கு வந்து செல்வர். பயணிகள் வருகைக்கு ஏற்ப வசதி இல்லை. மெயின் ரோட்டில் உள்ள நிழற்குடை தான் பஸ் ஸ்டாண்டாக இயங்குகிறது. பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால், நெரிசல் அதிகரிக்கின்றன. பஸ்

10 லட்ச ரூபாயில், சிவன்கோவில் எதிரே இடம் ஒதுக்கி, கழிப்பிட வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஆனால், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மதகுபட்டி மெயின்ரோடு தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் தவிக்கிறது. புது பஸ் ஸ்டாண்டை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

source : Dinamalar