Nagaratharonline.com
 
உதவி மின்பொறியாளர் இல்லாத மதகுபட்டி மின்வாரிய அலுவலகம்  Feb 7, 12
 
மதகுபட்டி மின்வாரியத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்கு கடந்த 6 மாதங்களாக உதவி மின் பொறியாளர் இடம் காலியாக உள்ளது.

சிவகங்கை பொறியாளர் கூடுதலாக கவனிப்பதால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இங்கு வருகிறார்.புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தல், மின் மீட்டர்களை இடம் மாற்றி வைத்தல், பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் மக்கள் தினமும் அலையும் நிலை உள்ளது.

மேலும் சேதமான மின்கம்பங்களை மாற்றுவதற்கும் நிரந்தரமான பொறியாளர் இல்லாததால் பல இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.
அனைத்து தேவைகளுக்கும் பொறியாளர் இருந்தால் மட்டுமே பிரச்னைகளை தீர்க்க முடியும் என்ற நிலையில், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

source : Dinamalar