Nagaratharonline.com
 
பஸ்சில் நகை திருடிய வாலிபர் கைது  Feb 6, 12
 
காரைக்குடி: காரைக்குடி அருகே ஓடும் பஸ்சில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் நகையை அடகு வைப்பதற்காக தனது மனைவியுடன் பஸ்சில் காரைக்குடிக்கு வந்தார். கைப்பையில் ஒரு கைச்செயின் மற்றும் மோதிரங்கள் உள்பட மூன்றரை பவுன் நகை வைத்திருந்தார். பஸ்சில் இவருக்கு அருகே சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு வந்தார்.
காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கிப் பார்த்த போது பையில் இருந்த நகைகளை காணவில்லை. உடனே சுதாரித்துக் கொண்ட சங்கர நாராயணன் தனது அருகே நின்று வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபர் காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் காரைக்குடி அருகேயுள்ள கண்டனூரை சேர்ந்த முத்து என்ற முத்துப்பாண்டி(23) என்பதும், சங்கரநாராயணனிடம் இருந்து நகைகளை திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது. நகைகளை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்

Source:Dinakaran